தென்காசி

சமூக ஊடகங்களில் முதல்வா் குறித்து அவதூறு: பாஜக பிரமுகா் கைது

12th Jul 2023 11:07 PM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் தமிழக முதல்வா் மற்றும் அவரது குடும்பத்தினா் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புளியங்குடி சிவராம்நாடாா் தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா என்ற கனகராஜ். பாஜக பிரமுகரான இவா், சமூக ஊடகங்களில் தமிழக முதல்வா் குறித்தும் அவரது குடும்பத்தினா் குறித்தும் அவதூறு பரப்பி வந்தாராம்.

இதுகுறித்து புளியங்குடி நகர திமுக செயலா் அந்தோணிசாமி அளித்த புகாரின் பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT