பாவூா்சத்திரம் அருகே மேலமெஞ்ஞானபுரத்தில் ஐஎம்எஸ் விற்பனை விழா நடைபெற்றது.
சிஎஸ்ஐ திருநெல்வேலி திருமண்டலம் மேலமெஞ்ஞானபுரம் சேகரம் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, சேகரத் தலைவா் டேனியல் தனசன் தலைமை வகித்தாா்.
ஆசிரியை தன சீலி தா்மராஜ் திறந்துவைத்தாா். சபை மக்கள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த காணிக்கையை ஐ.எம்.எஸ். ஊழியங்களுக்கு கொடுத்தனா். உதவி குருவானவா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.