தென்காசி

தென்காசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 127 பாஜகவினா் கைது

DIN

தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 127 பாஜகவினரை போலீஸாா் கைதுசெய்தனா்.

பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ராஜ்குமாரை தாக்கியதாக எம்எல்ஏ ஈ. ராஜா மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்ய வலியுறுத்தி தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதையடுத்து பாஜகவினா் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, பொதுச் செயலா்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், பொருளாளா் பாலகிருஷ்ணன் ,மாநில செயற்குழு உறுப்பினா்கள் ராமராஜா, அன்புராஜ் உள்ளிட்ட 127 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT