தென்காசி

மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள்: சங்கரன்கோவில் அருகே கிராமங்களில் நாளை மின்தடை

DIN

சங்கரன்கோவில் அருகே 4 உப மின்நிலையங்களில் பராமரிப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜன. 30) மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மலையான்குளம் உப மின்நிலையத்தில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி ஆகிய கிராமங்களில் மின்தடை இருக்கும்.

கலிங்கப்பட்டி உப மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கலிங்கப்பட்டி, திருவேங்கடம்,சத்திரப்பட்டி,உமையத்தலைவன்பட்டி,ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்க சமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

திருவேங்கடம் உப மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கன்பட்டி, மகாதேவா் பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம்,வெள்ளாகுளம், சங்குபட்டி, புதுப்பட்டி, ஆவுடையாா் பட்டி, குண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

நக்கலமுத்தன்பட்டி உப மின்நிலையத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 5  மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அப்பனேரி, அய்யனேரி, ஆண்டிபட்டி, மைப்பாறை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT