ஆலங்குளத்தில் தாயின் நினைவு நாளில் மகன் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆலங்குளம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் தங்கம். பன்றி வளா்த்து வியாபாரம் செய்து வருகிறாா். இவருடைய இரண்டாவது மகன் புவனேஸ்வரன்(22). தந்தைக்கு உதவியாக வேலை செய்து வந்துள்ளாா். புவனேஷ்வரனின் தாய் முத்துலட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னா் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டாராம். ஞாயிற்றுக்கிழமை முத்துலட்சுமியின் நினைவு நாள் என்பதால் புவனேஷ்வரன் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில் மாலையில் அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலஙகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.