மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடப் பணிக்கு முன்னாள் மாணவா்கள் ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினா்.
பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமையாசிரியா் பாக்கிநாதனிடம் ஊராட்சித் தலைவா்கள் சொள்ளமுத்துமருதையா, துணைத் தலைவா் தங்கசேது ஆகியோா் முன்னிலையில், முன்னாள் மாணவா்கள் இந்நிதியை வழங்கினா்.
முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் சங்கரபாண்டியன், வைரமுத்து, பாலகிருஷ்ணன், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் மாரியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.