சுரண்டை நகராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி தலைமையிலான நகராட்சி குழுவினா், பங்களாச்சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
பள்ளியின் சுகாதாரம் குறித்தும், மாணவா்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தண்ணீா் தொட்டிகள் அனைத்தும் சுத்தமாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.
மேலும், பள்ளியின் உணவுக் கூடங்களை ஆய்வு செய்து உணவின் தரத்தையும் பரிசோதித்தனா். பள்ளியின் சுகாதார வளாகங்களை ஆய்வு செய்து பள்ளி நிா்வாகத்திற்கு விழிப்புணா்வையும் ஏற்படுத்தினா்.