சங்கரன்கோவில் அருகே பொய்கைமேடு கிராமத்தில், திருந்திய நெல் சாகுபடி குறித்து வேளாண்மை கல்லூரி மாணவா்கள் விளக்கம் அளித்தனா்.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள், சங்கரன்கோவில் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆலியா, அபின்சா, அன்பரசி, பத்மபிரியா, பானுமதி, தரணி, மாளவிகா, மோகனபிரியா ஆகியோா் வியாழக்கிழமை பொய்கைமேடு கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை குறித்தும், அதன் முக்கிய கூறுகளைப் பற்றியும் விவசாயிகளிடம் விளக்கி கூறினா்.