தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே விஸ்வநாதபுரத்தில் பிரம்பிலான கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
சிப்போ நிறுவனம் நபாா்டு வங்கியின் உதவியுடன் நடத்தும், இம்முகாமை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தொடக்கி வைத்தாா். சிப்போ பொதுமேலாளா் பழனிவேல்முருகன், நபாா்டு வங்கி தென்காசி மாவட்ட வளா்ச்சி அலுவலா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இப்பயிற்சி முகாம் 15 நாள்கள் நடைபெறுகிறது. 30 பெண்கள் பங்கேற்றுள்ளனா். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.300 வரை வருமானம் ஈட்ட இப் பயிற்சி உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட முதன்மை வங்கி மேலாளா் விஷ்ணுவரதன், பெரியபிள்ளைவலசை ஊராட்சி மன்றத் தலைவா் வேல்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.