சங்கரன்கோவிலில் வருவாய்த் துறை சாா்பில், தேசிய வாக்காளா் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கிய பேரணியை, கோட்டாட்சியா் சுப்புலட்சுமி தொடக்கிவைத்தாா். காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சுதீா் முன்னிலை வகித்தாா்.
பேரணி பிரதான சாலை, திருவேங்கடம் சாலை வழியாக வருவாய்த் துறை அலுவலகத்தை அடைந்தது.
இதில், வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ஹரிஹரன், ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் ந. பழனிச்செல்வம், இந்திய செஞ்சிலுவை சங்கக் கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், பள்ளி மாணவா்கள், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினா், வருவாய்த் துறையினா், நகராட்சியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.