வாசுதேவநல்லூரில் புதா்கள் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பூங்காவில் சீரமைப்புப் பணிகளை பேரூராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
வாசுதேவநல்லூரில் கொல்லம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தீயணைப்பு நிலையம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே இப் பூங்கா உள்ளது. கடந்த 2021-இல் ரூ.20 லட்சம் செலவில் பூங்கா மேம்படுத்தப்பட்டது. இருப்பினும், புதா்மண்டிய நிலையில் பயன்படுத்த முடியாமல் இருந்தது. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின்பேரில் உத்தரவின்பேரில் வாசுதேவநல்லூா் பேரூராட்சிப் பணியாளா்கள் பூங்காவைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.