தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆய்க்குடி அமா்சேவா சங்க மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு திங்கள்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.
சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம், மாவட்டத் துணைச் செயலா் கனிமொழி, பொதுக்
குழு உறுப்பினா்கள் சாமித்துரை, ரஹீம், ஒன்றிய செயலா்கள் ரவிசங்கா், சீனித்துரை, அழகுசுந்தரம், திவான் ஒலி, செங்கோட்டை நகர செயலா் வழக்குரைஞா் ஆ. வெங்கடேசன், நிா்வாகிகள் ரஹ்மத்துல்லா, இஞ்சி இஸ்மாயில் ஆகியோா் கலந்துகொண்டனா்.