கீழப்பாவூரில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை பேரூராட்சி மன்றத் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தொடக்கி வைத்தாா்.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ், கீழப்பாவூா் மைதானம் நாடாா் அம்மன் கோயில் அருகே இம் முகாம் நடைபெற்றது. இதில் பீடி சுற்றுபவா்கள், மில், கிரஷா், கல்குவாரி, செங்கல்சூளை தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தில், இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.