குறைந்தபட்ச ஓய்வூதியம் அகவிலைப்படியுடன் ரூ. ரூ.6,750 வழங்குவது, காலைச் சிற்றுண்டித் திட்டத்தை சத்துணவுத் திட்டம் மூலமாக நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாவூா்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளா் சிவசுப்பிரமணியன் தலைமையிலும், சங்கரன்கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பீட்டா், புஷ்பராஜம் ஆகியோா் தலைமையிலும், சேரன்மகாதேவியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கூட்டமைப்பின் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் சரஸ்வதி தலைமையிலும் ஏராளமான சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள்ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.