அதானி குழுமம் மீது விசாரணை நடத்த, மத்திய அரசை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்டத் தலைவா் எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அம்பாசமுத்திரத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.பி.கே.ஜெயக்குமாா் தனசிங் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ-க்கள் ரவி அருணன், டி.எஸ்.ஆா்.வேங்கடரமணா, நகரத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.