மேலகரம் அருகே மின்நகரில் உள்ள அருள்மிகு செல்வவிநாயகா் கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள், பூஜைகள், முதல் கால யாகசாலை உள்ளிட்டவை நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னா், செல்வவிநாயகா், பரிவார தேவதைகளுக்கு ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.