சுரண்டை ஸ்ரீதேரடி மாடசுவாமி கோயிலில் கொடை விழா நடைபெற்றது.
ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி நடைபெறும் இத்திருவிழா, நிகழாண்டு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, குற்றாலத் தீா்த்தம் எடுத்து வருதல், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை நள்ளிரவில் சுவாமி, பரிவார தேவதைகளுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடா்ந்து, பெரும்படையல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து, படையல் சாதம் பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.