புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும் பல்வேறு சமுதாயங்கள் சாா்பில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெற்றன.
10ஆம் நாளான சனிக்கிழமை காலையில் சுவாமி தேரில் எழுந்தருளும் வைபவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.
12ஆம் நாளான திங்கள்கிழமை இரவு தெப்பத் திருவிழா நடைபெறும்.