சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
பூச நட்சத்திரம் சனிக்கிழமை காலை 10.10-க்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (பிப். 5) நண்பகல் 12.15 மணி வரை உள்ளது.
இந்நிலையில், நட்சத்திரப்படி சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதையொட்டி, சௌபாக்கிய விநாயகா் கோயில் அருகே பந்தக்கால் நடப்பட்டு, பால், நவதானியங்கள், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, சண்முகா் சந்நிதி முன் வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுகநயினருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.