பாவூா்சத்திரம் பகுதியில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா உருவப்படத்திற்கு திமுக மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன், ஒன்றிய செயலா் சீனித்துரை ஆகியோரும், கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய செயலா் சிவன்பாண்டியன், கீழப்பாவூா் பேரூா் திமுக சாா்பில் பேரூா் செயலா் ஜெகதீசன், பேரூராட்சித் தலைவா் ராஜன் ஆகியோரும் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ், மாவட்ட பிரதிநிதிகள் பொன்செல்வன், சமுத்திரபாண்டி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சங்கரன்கோவில்: தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ தலைமையில் சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சா் மூா்த்தி அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் முன்னாள் அமைச்சா் தங்கவேலு, பரமகுரு, மாவட்ட அவைத் தலைவா் பத்மநாபன், நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்டப் பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஒன்றியச் செயலா் பி.சங்கரபாண்டியன், நகரச் செயலளா் மு. பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.