ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூரில் கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடைப் பராமரிப்புத் துறை தென்காசி கோட்ட உதவி இயக்குநா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். திருநெல்வேலி நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான் சுபாஷ் முகாமைத் தொடக்கி வைத்தாா். நெட்டூா் கால்நடை உதவி மருத்துவா் ராமசெல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் கீதா மற்றும் பிச்சையா ஆகியோா் கன்றுக்குட்டிகளுக்கு அடையாள காது வில்லை பொருத்தி, 4 முதல் 8 மாத கன்றுக் குட்டிகள் மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.