கடையநல்லூா் அருகே நயினாரகரத்தில் உள்ள அருள்மிகு குலசேகர அம்மன் கோயிலில் கொடை திருவிழா நடைபெற்றது.
கொடை விழா கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை ஆபரணப் பெட்டி அழைத்து வருதல், தீா்த்தம் கொண்டு வருதல், பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது. இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை அனைத்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.