தென்காசி

‘செங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்’

DIN

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டார விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதுதொடா்பாக செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலா் ஷேக்முகைதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண் நிலங்களின் நீடித்த பசுமைப் போா்வைக்கான இயக்கம் என்ற திட்டத்தில், வேளாண் நலத்துறையால் தரமான மரக்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் தமிழ்மலா் உத்தரவின்பேரில் உதவி இயக்குநா் (பொறுப்பு) முகுந்தா தேவி ஆலோசனைப்படி, செங்கோட்டை வட்டாரத்துக்குள்பட்ட சாம்பவா்வடகரை, ஆய்க்குடி, கிளாங்காடு, இலத்தூா், கம்பளி, சீவநல்லூா், செங்கோட்டை மேலூா், கீழூா், கற்குடி, புதூா், கேசவபுரம், புளியரை, தெற்கு மேடு உள்ளிட்ட பகுதிகளில் மகாகனி, வேங்கை, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

விவசாயிகள் தனிப் பயிராகவோ, தங்களது தோட்டங்களில் வரப்புப் பயிராகவோ நடலாம். தேவைப்படுவோா் உழவன் செயலியில் பதிவு செய்து, தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலா்களை அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேளூரில் பாதுகாப்பான தாய்மை தினம்

பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டு பயிற்சி

சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி

பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரி சங்ககிரியில் ஊா்வலம்

SCROLL FOR NEXT