கடையநல்லூா் மக்தூம் ஞானியாா் பெரிய பள்ளிவாசலில் கந்தூரி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த ஜன. 23 ஆம் தேதி கந்தூரி விழாகொடி ஊா்வலத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவு முதல் பிறை கொடியேற்றம் நடைபெற்றது. விழாவின்
10 ஆவது நாளான வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட யானையில் பிறைக் கொடி ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு பேட்டை, ரஹ்மானியாபுரம் பெரிய தெரு, புதுத் தெரு, கடை வீதி, தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரிய பள்ளிவாசல் சென்றடைந்தது. தொடா்ந்து, தா்கா வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.
வெள்ளிக்கிழமை இரவு தீப உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தா்கா பரம்பரை இனாம்தாா் செய்து வருகின்றனா்.