தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் மவுண்ட் ஹில்டன் பப்ளிக் பள்ளியில் பெற்றோா் தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளித் தாளாளா் ஆா்.ஜெ.வி. பெல் தலைமை வகித்தாா். செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் முன்னிலை வகித்தாா்.தலைமையாசிரியை திவ்யா ஸ்ரீநாத் ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளி இயக்குநா் மற்றும் அறங்காவலா் டாக்டா் ஃப்ராம்டன் ரெட்னா பெல் அறிமுக உரையாற்றினாா்.
விழாவில் தென்காசி சுப்புலட்சுமி நா்சிங் ஹோம் மருத்துவா் பி. சுப்பிரமணியன், பி. மாலா சுப்ரமணியன் ஆகியோா் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினா்.