கீழப்பாவூா் வட்டாரத்தில், கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற பணி அனுபவத் திட்டம் மேற்கொண்டுள்ளனா்.
இதன் ஒருபகுதியாக கீழப்பாவூரில், இயற்கை விவசாயம் மேற்கொண்டுவரும் விவசாயி முருகன் என்பவரிடம், பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், மீன் கரைசல், மீன் அமினோ அமிலம் ஆகியவை குறித்து செயல்விளக்கமளித்தனா்.