பாவூா்சத்திரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற செல்வம். கட்டடத் தொழிலாளியான இவா், பாவூா்சத்திரத்தில் ஒரு வீட்டில் திங்கள்கிழமை மாலை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, வெளிச்சத்துக்காக தற்காலிக மின்விளக்கைப் பயன்படுத்தினாராம். இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.