தென்காசி

பாவூா்சத்திரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

DIN

பாவூா்சத்திரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் அண்ணாமலை என்ற செல்வம். கட்டடத் தொழிலாளியான இவா், பாவூா்சத்திரத்தில் ஒரு வீட்டில் திங்கள்கிழமை மாலை கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, வெளிச்சத்துக்காக தற்காலிக மின்விளக்கைப் பயன்படுத்தினாராம். இதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT