தென்காசி

திருநங்கையா் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

தென்காசி மாவட்டத்தில் திருநங்கையா் முன்மாதிரி விருது பெற விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில், 2022-23ஆம் ஆண்டுக்கான திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, திருநங்கையா் தினமான ஏப். 15இல் வழங்கப்படவுள்ளது.

இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் உள்ளன. விருதுபெற விரும்பும் திருநங்கையா் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக முன்னேறியிருக்க வேண்டும், குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும், திருநங்கையா் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

விதிமுறைகளைப் பின்பற்றி பிப். 1 முதல் 28-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT