சுரண்டை நகா்மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். ஆணையா் முகம்மது சம்சுதீன், துணைத் தலைவா் சங்கராதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நகராட்சியில் நிறைவேற்றவுள்ள திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், ஆணையா் முகம்மது சம்சுதீன் ஆகியோா் பதிலளித்தனா்.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமாா், ஜெயராணி, உஷா, சாந்தி, வசந்தன், சக்திவேல், வெயில்முத்து, சந்திரசேகர அருணகிரி, பரமசிவன், ஜெயபாலன், ராஜேஷ், மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.