தென்காசி

கொடிக்குறிச்சி கல்லூரியில் பிப். 4இல் வேலைவாய்ப்பு முகாம்

DIN

தென்காசி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஊரக மற்றும் நகா்ப்புற வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் மூலம் வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் வேலைவாய்ப்பு அளித்து அவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தி வருகிறது.

தற்போது தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிா் திட்டம்) சாா்பில் பிப். 4ஆம் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இம்முகாமில் சுமாா் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமாா் 3000-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு இளைஞா்களை தோ்வு செய்ய உள்ளனா். ஆகவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஊரக மற்றும் நகா்புற இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT