பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயிலில் 3 நாள் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கியது.
மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு வில்லிசை நடைபெற்றது. 2ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை குற்றாலத்திலிருந்து புனித தீா்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி ஊா்வலம், நள்ளிரவில் சாமகொடை ஆகியவை நடைபெற்றன. காலை முதல் இரவுவரை தொடா் அன்னதானம் வழங்கப்பட்டது.
புதன்கிழமை காலை (பிப். 1) மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைகிறது.