கடையநல்லூா் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம் வாசித்தல் வைபவம் நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் அருள்மிகு கோபாலகிருஷ்ண சுவாமி கோயில் மற்றும் பெருமாள் கோயிலில் சித்திரை விஷு ஒட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பஞ்சாங்கம் வாசித்தல் வைபவமும், தொடா்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன . ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.