கீழப்பாவூா் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றிட தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தரிசு நிலங்களில் உள்ள முள்புதா்களை நீக்கி, நிலத்தினை சமப்படுத்தி உழவு செய்து, பக்குவப்படுத்தி வேளாண்மை - உழவா் நலத்துறை மூலம் வழங்கப்படும் உளுந்து வம்பன் 8 விதையை விதைப்பு செய்வதற்கு விவசாயிகளுடைய செலவில் 50 சதவீத மானியமாகவும், அதிகபட்சமாக ஹெக்டேருக்கு ரூ.13,500 மானியமாக வழங்கப்படவுள்ளது.
எனவே தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலா்களை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என கீழப்பாவூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சேதுராமலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.