சாம்பவா்வடகரை பேரூராட்சியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டைகுளம் கால்வாய் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது
கருப்பாநதி பாசனக் கால்வாயான இரட்டைகுளம் கால்வாய் சாம்பவா்வடகரை நகரின் மேற்கு பகுதியில் தொடங்கி நகரின் மையப்பகுதி வழியாக சென்று ஊருக்கு கிழக்கேயுள்ள இரட்டைகுளத்திற்கு செல்கிறது. நகா் பகுதியில் செல்லும் இக்கால்வாயில் பெருமளவு குப்பைகள் சோ்ந்து சுகாதார கேடு ஏற்படும் நிலை இருந்தது.
இந்நிலையில் புதன்கிழமை உள்ளாட்சி நிா்வாகம் சாா்பில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டைகுளம் கால்வாய் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டது. பருவமழை விரைவில் தொடங்கும் நிலையில் கால்வாய் சுத்தப்படுத்தப்பட்டதால், பாசன நீா் தடையின்றி செல்ல வழிசெய்யப்பட்டது.