தென்காசி

ஆலங்குளம், புளியங்குடியில் நாளை மின்தடை

DIN

ஆலங்குளம் ஊத்துமலை பகுதியில் பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை (அக்.1) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மின் உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலங்குளம் ஊத்துமலை, கீழப்பாவூா் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட ஆலங்குளம், ஆண்டிபட்டி, குருவன்கோட்டை, குத்தப்பாஞ்சான், ஊத்துமலை, கீழக்கலங்கல், கல்லத்திகுளம், ருக்குமணியம்மாள் புரம், கழுநீா்குளம், அடைக்கலபட்டணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை படும்.

புளியங்குடி பகுதியில்...

கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: புளியங்குடி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகா், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூா், சொக்கம்பட்டி, திரிகூடபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

வீரசிகாமணி பகுதியில்...

வீரசிகாமணி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 வரை வீரசிகாமணி, சோ்ந்தமரம், பாம்புகோயில், திருமலாபுரம், நடுவக்குறிச்சி, வட நத்தம்பட்டி, அரியநாயகிபுரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT