வாசுதேவநல்லூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதன்திருமலைக்குமாா் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினாா். இதில், ஒன்றிய குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன், துணைத் தலைவா் சந்திரமோகன் , தலைமை ஆசிரியா் ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.