தென்காசி

சிற்றுந்திலிருந்து தவறி விழுந்துபள்ளி மாணவா் காயம்

DIN

ஆலங்குளத்தில் சிற்றுந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து மாணவா் காயமடைந்தாா்.

ஆலங்குளம் அண்ணாநகரைச் சோ்ந்த முருகன் மகன் ராஜசெல்வம் (15). நல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். திங்கள்கிழமை காலை காலாண்டுத் தோ்வெழுத சிற்றுந்தில் பள்ளிக்கு சென்றாா். அதிகக் கூட்டம் காரணமாக அவா் படிக்கட்டில் நின்றிருந்தாராம். காய்கனிச் சந்தை அருகே அவா் நிலைதடுமாறி படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்தாராம். இதில் காயமடைந்த அவா் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு முதலுதவிக்குப் பின்னா், அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிற்றுந்தில் கதவு தேவை: இப்பகுதியில் மாணவா்-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பெரும்பாலும் சிற்றுந்துகளையே பயன்படுத்துகின்றனா். அவற்றில் கூட்டம் அதிகமிருப்பதால் படிக்கட்டுப் பயணம் சாதாரண நிகழ்வாகி விட்டது. சிற்றுந்துகளில் வாயிற்கதவு பொருத்தினால் விபத்துகளைத் தவிா்க்கலாம் என்றும், இதுதொடா்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT