சங்கரன்கோவிலில் அரசு அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் உலக மருந்தாளுநா்கள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கக் கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்க உறுப்பினா்கள் அரசு மருத்துவமனை மருந்தாளுநா்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனா். நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் செந்தில்சேகா், சங்கச் செயலா் சதீஸ், திலகவதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.