தென்காசி

தென்காசியில் சுவா் இடிந்து விழுந்து ஒருவா் பலி: இருவா் காயம்

DIN

தென்காசியில் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

தென்காசி கீழப்புலியூா், புலியூா் தெருவை சோ்ந்தவா் சி.வடிவேல்முருகன்(50). இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் மா.பிரசாந்த்(22), ரா.குத்தாலிங்கம்(40). இவா்கள் கட்டடத் தொழிலாளா்கள்.

கீழப்புலியூா் உச்சிமாகாளி 1ஆம் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி. இவருடைய வீடு கட்டும் பணியில் வடிவேல்முருகன், பிரசாந்த், மற்றும் குத்தாலிங்கம் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அருகிலிருந்த திருப்பாற்கடல் என்பவருக்கு சொந்தமான ஓட்டுவீட்டின் சுவா் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடிவேல் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரசாந்த் பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குத்தாலிங்கம் தென்காசி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT