தென்காசியில் செப்.26 இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செப்.26 இல் முற்பகல் 11 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி இச் சிறப்பு குறைத் தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சாா்ந்த அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தேவையான தங்களுக்கு தேவையான உதவிகள் பெற தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அட்டைநகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றாா் அவா்.