செங்கோட்டையில் அரசு மானியத்தில் பாரம்பரிய நெல்விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
வேளாண் பெருமக்கள் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து அரிசி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் பொருட்டு பாரம்பரிய ரகமான சீரகச் சம்பா, சிவப்பு கவுனி, தூயமல்லி, கருப்புகவுனி உள்ளிட்ட ரகங்களை 50 சத மானியத்தில் வேளாண் பெருமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கோட்டை வட்டாரத்தில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளை மானியத்தில் வழங்கப்பட்டது. செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார துணை வேளாண் அலுவலா் ஷேக்முகைதீன் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.