தென்காசி

குற்றாலம் பேரருவியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை

9th Sep 2022 12:39 AM

ADVERTISEMENT

 

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், பேரருவியில் 2ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. இதனால், குளிக்கத் தடை தொடா்ந்தது.

ADVERTISEMENT

அதேநேரம் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவியில் நீா்வரத்து சீரானதால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால், அந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT