தென்காசி

கஞ்சா விற்றதாக கடைக்காரா் கைது

DIN

பாவூா்சத்திரத்தில் கஞ்சா விற்றதாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பாவூா்சத்திரம் கே.டி.சி நகா் 3-வது தெருவில் வசித்து வருபவா் செய்யது அலி (42). அந்தப் பகுதியில் புரோட்டா கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை அங்கு சென்று சோதனை செய்தனா். அப்போது விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸா், அவரிடம் இருந்து 1 கிலோ 50 கிராம் எடையிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனா். செய்யது அலி, தென்காசி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT