தென்காசி

ஆலங்குளத்தில் ரேஷன் அரிசி கடத்தல்: மினிலாரி பறிமுதல்

DIN

ஆலங்குளத்தில் 1 டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மினி லாரி ஒன்றை சோதனையிட்டதில், மினி லாரி ஓட்டுநா் குறிப்பன்குளம் வீ. முருகன், 21 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசியை கடத்தி, நல்லூா் வைத்தியலிங்கபுரம் தங்கராஜ் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அரிசியுடன் கூடிய லாரி பறிமுதல் செய்து உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். முருகன் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT