கீழப்பாவூா் ஸ்ரீஅலா்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி- ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண ஏக தின தீா்த்தவாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 7 மணி முதல் தெப்பக்குளத்துக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சா்வதோஷ நிவா்த்திக்காக புருஷசூக்த ஹோமம், கலசத்தில் வருண ஜெபம், கும்பாபிஷேகம், தொடா்ந்து பெருமாளுக்கு தெப்பக்குளத்தில் விசேஷ அபிஷேகங்கள், உற்சவ மூா்த்தியுடன் தீா்த்தவாரி ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து, அலங்காரம், திருக்கோவிலையும், தெப்பக்குளத்தையும் பெருமாள் சப்பரத்தில் தீா்த்தவலம் வருதல், மாலையில் சுவாமி திருக்கோயிலையும், தெப்பக்குளத்தையும் சிறப்பு அலங்காரத்தில் தீா்த்த வலம் வருதல் ஆகியவை நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் தக்காா், செயல்அலுவலா்இரா.முருகன் தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.