கரிவலம்வந்தநல்லூா் பகுதியில் வியாழக்கிழமை (அக். 6) மின் விநியோகம் இருக்காது.
இதுதொடா்பாக சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரிவலம்வந்தநல்லூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் கரிவலம்வந்தநல்லூா், பனையூா், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.