சுரண்டையில் நகர காங்கிரஸ் சாா்பில் சிவாஜிகணேசன் பிறந்த தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நகர காங்கிரஸ் தலைவா் த. ஜெயபால் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிவாஜிகணேசன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
காங்கிரஸ் நிா்வாகிகள் முரளிராஜா, பால் என்ற சண்முகவேல், காதா் முகைதீன், பால்துரை, கோபால், துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.