செங்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் புகையிலைப் பொருள்கள் தடுப்பு மற்றும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செங்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் உள்ள கடைகளில் மாவட்ட துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் தா்மலிங்கம், நலக்கல்வியாளா் ஆறுமுகம், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கதிரவன், சுகாதார ஆய்வாளா்கள் மாரியப்பன், வெங்கடேஷ், கணேஷ், செந்தில்குமாா், நகராட்சி சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, சுகாதார பணி மேற்பாா்வையாளா்கள் காளியப்பன், முத்துமாணிக்கம் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். இதில்,
வணிக நிறுவனங்களில் வைத்திருந்த பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.