சுரண்டையில் முன்னாள் பிரதமா் ஜவகா்லால் நேரு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் நேருவின் படத்திற்கு நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் மலரஞ்சலி செலுத்தினா். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் நிா்வாகிகள் அண்ணாமலை, சங்கா், சந்திரன், கோபால், பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.