தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் சாா்பாக தென்காசி மாவட்டத்துக்குள்பட்ட தென்காசி கோட்டத்தில் மக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் ந. ராஜன்ராஜ் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகாா்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளா், ஏனைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
முகாமில், தென்காசி கோட்டத்துக்குள்பட்ட அனைத்து மின் பொறியாளா்களும் கலந்து கொண்டனா்.